Most Recent

Comment

ஆண்ட்ரியா மீது செம கடுப்பில் இருக்கும் கமல் ஹாஸன்

விஸ்வரூபம் 2 படம் தொடர்பாக கமல் ஹாஸன் நடிகை ஆண்ட்ரியா மீது கோபத்தில் உள்ளாராம். 
viswaroopam2_movie_latest_stills-tamilgossip.in

கடந்த 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு படம் வெளியானது. படத்தின் நாயகனான கமல் ஹாஸன் நாட்டை விட்டே வெளியேறுவது பற்றி எல்லாம் பேசினார்.

அந்த படத்தின் 2 பாகம் எடுக்கப்பட்டு வந்தது. 90 சதவிகித பணிகள் முடிந்த நிலையில் நிதி நெருக்கடியால் படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட வேலைகளை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளார் கமல். 

ஆண்ட்ரியா நடித்துள்ள காட்சிகளை பார்த்த கமலுக்கு அவரின் நடிப்பில் திருப்தி இல்லையாம். இதையடுத்து கமல் ஆண்ட்ரியாவை அணுகி மீண்டும் அந்த காட்சிகளில் நடிக்குமாறு கூறியுள்ளார். ஆண்ட்ரியாவோ மீண்டும் நடித்துக் கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் உலக நாயகன் ஆண்ட்ரியா மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.

Tamil Gossip Monday, December 5, 2016
முதல்வருக்காக ஷூட்டிங்கை நிறுத்தினாரா அஜித்

இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகில் பலருக்கும் நடிகன் என்பதையும் தாண்டி நல்ல குணம் கொண்ட மனிதர் என்ற பெயரை வாங்கியவர் அஜித்.
thala-57-shooting-stop-for-cm

ஒரு நேரத்தில் இவரை கிண்டல் செய்தவர்கள் இன்று அவரை பாராட்டி ஒரு முன்னுதாரணமாக கொண்டு வாழ்கிறார்கள்.
தற்போது அஜித் முதல்வரின் உடல் நிலை பற்றிய செய்தியை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது பல்கேரியாவில் இருக்கும் தல 57 படக்குழு ஷூட்டிங்கை எடுக்க மனமில்லாமல் சென்னைக்கு திரும்பி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா, அங்கு வந்திருந்த அஜித்தை பார்த்து நீங்க பைக், ரேஸ் என நிறைய ரிஸ்க் எடுக்கிறீங்களாமே?
உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள் என அவர் மிக அக்கறையுடன் அறிவுரை சொன்னதாக தகவல்.
இதனால் அஜித்க்கு முதலமைச்சர் மீது ஒரு தனி பிரியம் இருக்கிறது.

Tamil Gossip
எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு
believe-in-God-Shruti-Haasan-tamilgossip.in

“எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பிட்ட சாமிதான் என்று இல்லாமல் அனைத்து சாமிகளையும் கும்பிடுகிறேன். எனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி கடவுள் பக்கம் ஈர்க்கப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.

எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோவில்களுக்கு போகிறேன். புண்ணிய ஸ்தலங்களையெல்லாம் சுற்றி வருகிறேன். கோவிலுக்குள் எந்த சாமி இருக்கிறார் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வழிபாட்டு ஸ்தலங்களை பார்த்தாலே கும்பிட்டு விடுவேன். படப்பிடிப்புகளுக்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அங்கு இருக்கும் கோவில்களுக்கு சென்று விடுகிறேன். ஏராளமான கோவில்களில் சாமி கும்பிட்டு இருக்கிறேன்.


சாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டியது என்ன என்று கேட்கின்றனர். எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை என்றால் அது பொய் சொல்வதுபோல் ஆகி விடும். எனக்கும் சின்ன சின்ன வேண்டுதல்கள் இருக்கிறது. சாமி கும்பிடும்போது அவற்றை நினைத்துக் கொள்வேன். ஆனாலும் கடமைகளை செய்வதில் தயக்கம் கூடாது. சும்மா இருந்துவிட்டு எல்லாவற்றையும் கடவுள் செய்ய வேண்டும் என்று கருதினால் அது சரியல்ல. கடமைகளை செய்து முடிக்க வேண்டும். முடிவை கடவுளிடம் விட்டு விட வேண்டும்”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் ‘சி-3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தந்தை கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. பவன்கல்யாண் ஜோடியாக ‘காட்டமரயடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். 

Tamil Gossip
படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போகிறேன்: தமன்னா

நடிகை தமன்னா மும்பையில் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு
tammana-sad-in-my-film-tamilgossip.in

நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. பாகுபலி படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். இவ்வளவு உயரத்துக்கு வந்த நான் சிறு வயதில் இருந்து பயணப்பட்டு வந்த தூரங்களை நினைவுபடுத்தி பார்க்கும் போது வியந்து போகிறேன்.

எனது தந்தை கப்பலில் வேலை செய்ததால் அதிக நாட்களை கடலிலேயே கழித்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டு விட்டு நகை வியாபாரத்தில் இறங்கினார். அம்மாவும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து நான் பிறந்ததும் எனக்காக வேலையை விட்டுவிட்டார். அவருடைய தியாகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. பள்ளியில் படித்தபோது நாடகமொன்றில் நடித்தேன். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நாடக குழுவில் சேர்ந்தேன்.

நடிப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து யோகா கற்க ஆரம்பித்தேன். நான் படித்த பள்ளிக்கு நடிகை ராணிமுகர்ஜி உள்பட நிறைய திரையுலக பிரபலங்கள் வந்தனர். அவர்களை பார்த்து நடிப்பில் எனக்கு மேலும் தீவிரமான பற்று ஏற்பட்டது. எனது அம்மாவும் நீ ஒரு நாள் மிஸ் இந்தியா ஆவாய் என்று பேசி வந்தார். தொடர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்தேன். நடனமும் கற்றேன். அதன்பிறகு முழு நேர நடிகையாகி விட்டேன்.


தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் வெற்றி-தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன். அது யாராலும் முடியாது. வெற்றியில் சந்தோஷப்படுவதும் தோல்வியில் கவலைப்படுவதும் மனிதர்களுக்கு உள்ள இயற்கையான குணம். நான் நடித்த படம் தோல்வி அடைந்தால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும். எனது படங்கள் தோல்வி அடையும் போதெல்லாம் நான் துவண்டுபோகிறேன்.

கஷ்டப்பட்டு நடித்தும் சரியாக போகவில்லையே என்ற வேதனை இருக்கும். வெற்றி வரும்போது பலருக்கு கர்வம் ஏற்படும். ஆனால் அனுபவம் வரவர அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.”

இவ்வாறு தமன்னா கூறினார். 

Tamil Gossip Saturday, December 3, 2016