ரஜினியின் 2.0 படம் இப்படியா இருக்கும்

கபாலி சாதனையை தொடர்ந்து அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படுவது ஷங்கர் இயக்கத்தில் 2.0. படப்பிடிப்பின் கடைசி கட்டம் சென்னை திருக்கழுக்குன்றத்தில் செட் போட்டு சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
enthiran2-latest-news-tamilgossip.in

ஷூட்டிங் முடிந்து சூப்பர்ஸ்டார் எல்லோருக்கும் வாழ்த்துக்களை சொன்னதோடு, வெளியிலிருந்து ரசிகர்களுக்கும் தன் காரில் இருந்தவாரே டாடா காட்டிச்சென்றாராம்.
மகிழ்ச்சியான ரசிகர்கள் மேலும் திருப்தி அடையும் விதமாக இன்னொரு கூடுதல் தகவல். மிகவும் ரகசியமாக ஷூட்டிங் காட்சிகள் எடுக்க பட்டதாலும் ஏதாவதொரு தகவல்கள் ரசிகர்களுக்கு எப்படியாவது கிடைத்து விடுகிறது.
ஏற்கனவே பறவைகளை மையமாகிய காட்சிகள் இதில் உண்டு என நீங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அப்பறவைகள் இந்தோனேசியாவை சேர்ந்தவையாம். அங்குள்ள பறவைகள் சரணாலயம் போல தான் செட் இருந்ததாம்.
மேலும் ஹாலிவுட் ஜுராசிக் பார்க் படத்தில் வருவது போலவும் கொஞ்சம் மாற்றங்கள் கொண்டு வித்தியாசமாக காண்பித்திருக்கிறார்களாம்.
கண்டிப்பாக ஷங்கர் பெரிய விஷயத்தை சொல்லப்போகிறார் என பேச்சுக்கள் அடிபடுகிறது.

No comments