முன் பணம் வாங்காமல் நான் நடிக்க மாட்டேன் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் எங்களுக்கு படம் நடித்துத்தர ஒப்புக் கொண்டு இப்போது பின் வாங்குகிறார் என ஸ்டுடியோ கிரீன், வேந்தர் மூவிஸ், எஸ்கேப் ஆர்டிஸ்ட் என மூன்று நிறுவனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தந்துள்ளன.
sivakarthikeyan-act-to-new-condition-tamilgossip.in

இதற்கு சிவகார்த்திகேயன் விளக்கக் கடிதம் அளித்துள்ளார்.
மூன்று நிறுவனங்களில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் மட்டுமே சம்பளத்துக்கான முன்பணம் பெற்றுக் கொண்டேன். மற்ற இரு நிறுவனங்களிடம் வாய்மொழியாக மட்டுமே பேசினேன், முன்பணம் எதுவும் வாங்கவில்லை, அதனால் அவர்களுக்கு படம் நடித்துத்தர முடியாது என கறாராக தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் மட்டுமே தனது புகாருடன் சிவகார்த்திகேயனுடன் போட்ட ஒப்பந்த நகலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமர்ப்பித்துள்ளது என்பது முக்கியமானது.

No comments