சபாஷ் நாயுடு பற்றி வெளியான முக்கிய தகவல்

கமல்ஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வரும் சபாஷ் நாயுடு. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. 


SabashNaidu-movie-release-date-announced-kamalhassan-tamilgossip.in

இப்படம் தொடங்கியதிலிருந்து பல பிரச்சனைகள் தான், முதலில் இப்படத்தின் இயக்குநராக பணிபுரிந்த டி. கே ராஜீவ் குமார் உடல் நிலை சரியில்லாமல் படத்திலிருந்து விலகினார்.
அதன் பின் இயக்குனராக பொறுப்போற்ற கமலுக்கு, முதற் கட்டப்படப்பிடிப்பு முடித்து பிறகு வீட்டிலிருந்த நேரத்தில் மாடியிலிருந்து தடுக்கி விழுந்து காயம் அடைந்தார். இதனால் மீண்டும் படப்பிடிப்பு பாதிப்பானது.
தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் நேரத்தில் கவுதமியின் பிரிவு பெரிய மனவருத்தத்தை தந்துள்ளது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு போகவேண்டியது, ஆனால் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதால் தற்போதைக்கு அங்கு படப்பிடிப்பு நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கிடைத்த தகவல் படி சபாஷ் நாயுடு அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் உறுதியாக தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்ய தற்போதே கிளம்பி விட்டார் கமலின் மகளும், சபாஷ் நாயுடுவின் இணை இயக்குனரான அக்ஷரா ஹாசன்.

No comments