மச்சான்ஸ் என்று இனி ரசிகர்களை அழைக்க மாட்டேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மச்சான்ஸ் என்றால் அது நமீதா என்று ரசிகர்களுக்கு தெரியும், மச்சான்ஸ் அவரின் அடையாளம் என இருந்தது. சில படங்களின் தோல்வி மற்றும் தொழில் காரணமாக சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்த நடிகை நமீதா, புலிமுருகன் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்துள்ளார். மேலும் படவாய்ப்புகள் குவிந்து வருவதால் நமீதா மகிழ்ச்சியில் உள்ளார். ரசிகர்களை மச்சான்ஸ் என்று அன்புடன் அழைத்து வந்த நமீதா இனி அந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், தன் பெயரில், போலி சமூக வலைதள கணக்குகள் இருப்பதை அறிந்த நமீதா, அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில், அவர் கூறியிருப்பதாவது: என்னை விரும்பும், பின் தொடர நினைக்கும் சமூக வலைதள ரசிகர்கள், போலி கணக்குகளை கண்டு ஏமாற வேண்டாம். குறிப்பாக, namitha kapoor என்ற பெயரில் உள்ள, பேஸ்புக் கணக்கு என்னுடையது அல்ல; Namitha vankawala என்பதே, என் பேஸ்புக் கணக்கு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments