சிம்பு ஓபன் டாக் :அஜித் தோல்வியில் இருந்த போது யார் வந்தார்கள்

சிம்பு எது நினைத்தாலும் அதை வெளிப்படையாக பேசுவதே அவருக்கு பிரச்சனையாக அமைந்துவிடுகின்றது. அதேபோல் நேற்று பேஸ்புக்கில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் உங்கள் அடுத்த படத்தில் அஜித் குறித்து ஏதும் வசனங்கள் உள்ளதா என ஒரு ரசிகர் கேட்டார். உடனே அவர் ‘அஜித் சார் தற்போது எங்கோ உயரத்திற்கு சென்றுவிட்டார்.
அவருடைய ரசிகர்கள் பலம் அதிகமாகிவிட்டது, மிகவும் சந்தோஷமாக உள்ளது, அதை தான் தற்போது பலரும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
ஆனால், அவர் ஒரு கட்டத்தில் தோல்வியில் இருந்த போது கூட நான் அவர் குறித்து பல வசனங்கள் என் படத்தில் பேசியிருக்கிறேன்’ என கூறினார்.
இதனால் ரசிகர்களிடம் பெரும் சலசலப்பு எழ, பின் டுவிட்டரில் அதற்கு தெளிவான விளக்கமும் கொடுத்தார்.

No comments