நெல்லையில் கொடி பட டிரைலர் அறிமுக விழாவில் தனுஷ் பங்கேற்பு

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், துரை செந்தில் இயக்கத்தில், நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் கொடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

dhanush-trailer-release-speak-in-dhanush

இந்த படத்தில் நடிகை திரிஷா, மலையாள நடிகை அனுபமா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் திபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்த படத்தின் ‘டிரைலர்‘ முக்கிய ஊர்களில் நேற்று திரையிடப்பட்டது. நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் கொடி படத்தின் ‘டிரைலர்‘ அறிமுக விழா நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ரசிகர்கள் பலர், நடிகர் தனுஷ்சுடன் ‘செல்பி‘ எடுத்து கொண்டனர். அப்போது தனுஷ் நடித்த பல்வேறு படங்களில் இருந்து முக்கிய காட்சிகள் திரையிடப்பட்டன.

பின்னர் ரசிகர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் பேசினார். அவர் பேசியதாவது:-

எல்லோருக்கும் வணக்கம். உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் காட்டும் அன்பையும், பாசத்தையும் மறக்க முடியவில்லை. அதனால்தான் உங்களை தேடி வந்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தியேட்டரில் ‘புதுப்பேட்டை‘ படம் திரையிட்டபோது வந்தேன். தற்போது வந்து இருக்கிறேன்.


இனி இந்த அளவு காலதாமதம் ஆகாது. அடிக்கடி உங்களை சந்திக்க வருவேன். கொடி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். படத்தை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தியேட்டருக்கு வந்த நடிகர் தனுஷை, தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்.கே.ராமசாமி ராஜா, ஆர்.கே.முத்துராமன், மேலாளர்கள் கிருஷ்ணன், முத்துராஜ், வினியோகஸ்தர் சுப்புராஜ் ஆகியோர் ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தனர்.

நடிகர் தனுஷ்சுக்கு செண்டை மேளம் முழங்க தியேட்டர் வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

No comments