ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் கொடி.
அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொடி படத்தின் தயாரிப்பாளரான மதன், அவர் வெளியிட்ட முந்தைய படங்களுக்கான தொகையை இன்னும் விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லையாம்.
தற்போது இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொடி படத்தின் தயாரிப்பாளரான மதன், அவர் வெளியிட்ட முந்தைய படங்களுக்கான தொகையை இன்னும் விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லையாம்.
இந்நிலையில், நிலுவையில் இருக்கும் மொத்த பணத்தையும் கொடுத்தால் தான் கொடி படத்தை திரையிடுவோம் என்று விநிநோகஸ்தர்கள் கூறி வருவதால், இப்படம் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை படம் தீபாவளிக்கு வெளியாகாவிட்டால் அடுத்த ஆண்டு மே மாதம் தான் திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தனுஷ் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சனையில் தனுஷ் தலையிட்டு தீர்த்து வைத்தால் படம் தீபாவளிக்கு கொடி கட்டி பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக, த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட், சிங்கமுத்து ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக, த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட், சிங்கமுத்து ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments