தொலைக்காட்சி பேட்டியிலிருந்து கோபமாக வெளியேறிய பிரகாஷ்ராஜ்- மைக்கை தூக்கி எறிந்து ஏன்?

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் பிரகா
ஷ்ராஜ். இவர் நடிப்பில் விரைவில் ”இதொல்லே ராமாயணா” என்ற கன்னட படம் வரவிருக்கின்றது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவரிடம் காவேரி பிரச்சனை குறித்து கருத்து கேட்டுள்ளார் தொகுப்பாளர்.
உடனே கோபமான பிர்காஷ்ராஜ் ‘நான் ஒரு திரைப்பட நடிகர், படத்தை ப்ரோமோஷன் செய்ய வந்துள்ளேன், காவேரி பிரச்சனை நேற்று ஆரம்பித்து, இன்று முடிவதில்லை.
மிகவும் ஆழமான பிரச்சனை அது, உங்கள் பலனுக்காக சினிமா நடிகனிடம் இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள், இது மிகவும் தவறு.
மேலும், இந்த மாதிரி சமயத்தில் நீங்கள் தான் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும், இப்படி பொறுப்பே இல்லாமல் வாய்க்கு வந்த விஷயங்களை கேள்வியாக கேட்காதீர்கள்.
இதை அப்படி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புங்கள்’ என கூறி மைக்கை தூக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டார்.

No comments