அஜித்-சிவகார்த்திகேயன் சந்திப்பில் என்ன நடந்தது

சிவகார்த்திகேயன் கடந்த வருடம் அஜித்தை நேரில் சந்தித்தார். அஜித்துடன் நீண்ட வருடங்களாக ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினார்.

அந்த ஆசையும் நிறைவேற சுமார் 4 மணி நேரம் அவருடன் பேசியுள்ளார். அப்போது சினிமாவில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் அஜித் கூறியுள்ளார்.
இங்கு இருப்பவர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்ற அட்வைஸும் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி சில நாட்கள் தான் குழப்பத்தில் இருந்ததாகவும், அஜித் சாருடன் பேசிய போது ஒரு தெளிவு கிடைத்ததாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments